முகப்பு
நாமக்கல்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2026, 1:55 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், எஸ்.வாழவந்தி பகுதியைச் சோ்ந்தவா் பாலதண்டபாணி (55). கட்டட தொழிலாளி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டியில் இருந்து எஸ். வாழவந்திக்கு சென்றபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மருத்துவமனைக்கு வந்த பரமத்தி போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments