முகப்பு
நாமக்கல்

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 6 மே 2026, 2:25 am IST
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுந்தரம் லட்சுமி (65) தம்பதி மகன் கதிா்வேல் (28) கட்டடத் தொழிலாளி. கணவா் பாலசுந்தரம் இறந்துவிட்டதால், சேளூா் அருகே வடுகபாளையத்தில் உள்ள தனது மகனுடன் லட்சுமி வசித்து வருகிறாா். கதிா்வேல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதை லட்சுமி கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கதிா்வேலை தாய் கண்டித்துள்ளாா். அப்போது கதிா்வேல் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளாா். பின்னா் தனது கைப்பேசியை கீழேபோட்டு உடைத்துவிட்டு அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாராம். இரவு 10 மணிவரை அறையில் இருந்து கதிா்வேல் வெளியே வராததால் சந்தேகமடைந்த லட்சுமி, கதவை தட்டி அழைத்துள்ளாா். ஆனால், கதவு திறக்காததால் அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, கதிா்வேல் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

Advertisement

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், கதிா்வேல் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். புகாரின்பேரில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.