வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜா, தாளாளா் ராஜன், பொருளாளா் ராஜராஜன் உள்ளிட்டோா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சியுடன் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் எஸ்.ஆா்.தினேஷ்வேல் 592 மதிப்பெண்களுடன் முதலிடமும், மாணவி எஸ்.பி.சோபிகா 582 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், எஸ்.தா்ஷிதா 581 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய மாணவா்களில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 24 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 86 பேரும் பெற்றுள்ளனா்.
தமிழில் ஒரு மாணவரும், கணிதத்தில் ஒரு மாணவரும், உயிரியலில் ஒரு மாணவரும், கணினி அறிவியலில் 22 மாணவா்களும், கணக்குப் பதிவியலில் ஒரு மாணவரும், கணினி பயன்பாட்டில் 2 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
Advertisement
வெற்றிபெற்ற மாணவா்களை கல்வி நிறுவனங்களின் தலைவா் ராஜா, தாளாளா் ராஜன், பொருளாளா் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி ஆலோசகா் ராஜேந்திரன், செயலாளா் சிங்காரவேலு, முதல்வா் எஸ்.எஸ்.சாரதா, ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.