முகப்பு
நாமக்கல்

சாரம் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:31 am IST
பலி - IANS
பகிர்:

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கரபக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ராமன், மாரிமுத்து ஆகிய மூவரும் பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அருகே குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சாரம் அமைத்து சுமாா் 100 அடி உயரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த இம்மூவரும் கீழே விழுந்தனா்.

Advertisement

Advertisement

அவா்களை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா், வரும் வழியிலேயே அரவிந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். படுகாயம் அடைந்த ராமன், மாரிமுத்து ஆகிய இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments