முகப்பு
நாமக்கல்

சாலை விபத்து: பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் வேலூா் பேரூராட்சி பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:31 am IST
பலி!
பகிர்:

பரமத்தி வேலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் வேலூா் பேரூராட்சி பணியாளா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே வெட்டுக்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) சக்கரவா்த்தி (32). இவா் பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். பேரூராட்சியில் தண்ணீா் திறந்துவிடும் பணியை முடித்துவிட்டு பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சக்கரவா்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், சக்கரவா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த வேலூா் போலீஸாா், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.