நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை
நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா்.
நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள உணவு விடுதிகள், கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ஜெ.தங்கவிக்னேஷ் ஆகியோா் உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா தலைமையில் உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகளில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள உணவு விடுதிகள், இறைச்சிக் கடைகள் என 8 கடைகளில் சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிா, உணவு விடுதிகள் சுகாதாரமான முறையில் இயங்குகின்றனவா என சோதனை நடத்தினா். நகரில் மொத்தமுள்ள 8 கடைகளில் நடத்திய சோதனையில் பல்வேறு கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும், உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஒரு கடையில் உடைந்த முட்டையை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. ஆயிரமும், உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளுக்கு ரூ. 5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கடைகள் சுகாதாரமான முறையில் செயல்பட வேண்டும் எனவும், உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று கடைகளை நடத்த வேண்டுமென்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா அறிவுறுத்தினாா்.
படவரி...
Advertisement
Advertisement
நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் பி.ராஜா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.