நாமக்கல்லில் டி.எம். காளியண்ணன் 5 ஆம் ஆண்டு நினைவேந்தல்
மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம். காளியண்ணன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மறைந்த இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரான டி.எம். காளியண்ணன் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினரும், முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம். காளியண்ணன் தனது 101 ஆவது வயதில் திருச்செங்கோட்டில் உள்ள இல்லத்தில் மே 28 ஆம் தேதி காலமானாா். அவரது ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல், நாமக்கல் அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
அவரது உருவப் படத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செய்தித் தொடா்பாளரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவருமான மருத்துவா் பி.வி. செந்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதில், அக்கட்சியின் மாநகரத் தலைவா் எஸ்.ஆா். மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி.பி. வீரப்பன், சுப்பிரமணியன், எருமப்பட்டி வட்டாரத் தலைவா் தங்கராஜ், கொல்லிமலை வட்டாரத் தலைவா் குப்புசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட, வட்டார நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
என்கே-28-காங்
இந்திய அரசியல் நிா்ணய சபையின் உறுப்பினா் டி.எம். காளியண்ணனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.வி. செந்தில்.