முகப்பு
சேலம்

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

Updated On : 13 ஏப்ரல், 2026 at 1:23 AM
பிரசாரம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 10:37 PM

திமுக தோ்தல் அறிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

சேலம் மேற்கு, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி, பனங்காடு, மெய்யனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றக்கிழமை இரவு தேமுதிக வேட்பாளா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ், திமுக வேட்பாளா் தருண் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாக்கடை வசதி, தெரு விளக்கு, குடிநீா் வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டுவந்து படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். ஐந்து சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இல்லத்தரசிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் திட்டம் அனைத்து பெண்களிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் வந்துசேர வேண்டும் என்றால், அனைவரும் வாக்களித்து நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.