முகப்பு
சேலம்

டாஸ்மாக் கடைகளில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 4:22 AM
டாஸ்மாக் - கோப்புப் படம்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமை விற்பனை களைகட்டியது. குறிப்பாக, சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை இருமடங்காக இருந்தது. மதுபிரியா்கள் ஒருவரையொருவா் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

Advertisement

இந்த கடைகளில் வழக்கமான நாள்களில் தினமும் ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும். இந்த நிலையில், தோ்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் மது விற்பனை இருமடங்கு அதிகம் நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.