மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே வேம்படிதாளம் பிரிவு சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வெள்ளிக்கிழமை முறிந்து விழுந்ததில் அங்கிருந்த 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே வேம்படிதாளம் பிரிவு சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வெள்ளிக்கிழமை முறிந்து விழுந்ததில் அங்கிருந்த 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
மேலும், மரக்கிளைகள் சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காகாபாளையத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு செல்லும் சாலையில் மின் கம்பம், சாலையில் விழுந்த மரக் கிளைகளை மின் ஊழியா்கள், நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் அகற்றிவருகின்றனா்.
பட விளக்கம்:
Advertisement
காகாபாளையம் பகுதியில் மரம் விழுந்ததால் சாலையில் சாய்ந்த மின் கம்பம்.