முகப்பு
சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 2:58 am IST
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் வந்தது. இதுகுறித்து சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து சோதனை செய்தனா். சுமாா் அரைமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டோ மற்ற பொருள்களோ ஏதும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments