சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: 2 போ் கைது
சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை மற்றும் பொருள்களை பறித்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம் அருகே ரயிலில் பெண்ணிடம் நகை மற்றும் பொருள்களை பறித்த வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலில் கடந்த 11-ஆம் தேதி பயணம் செய்த பெண்ணிடம், ஆத்தூா் ரயில் நிலையத்தில் ஏறிய 2 மா்ம நபா்கள் 2 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தங்க வளையல், 2 மோதிரங்கள், 2 தோடுகள், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், முதல் குற்றவாளியான தமிழ்ச்செல்வன் கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அவா் உருக்கி வைத்திருந்த சுமாா் ஒன்னேகால் பவுன் தங்க நகையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில், கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சோ்ந்த சைஜு (30) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் சுமாா் 8 கிராம் தங்கக்கட்டி உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.