முகப்பு
சேலம்

தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

மேட்டூரில் கட்டடத் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:59 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மேட்டூரில் கட்டடத் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூா் அருகே உள்ள கோல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (47), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி வைகாசி மாதம் நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவின்போது தங்க நகைகளை அணிந்து பின்னா் வீட்டில் பீரோவில் வைத்து பூட்டி உள்ளாா்.

கடந்த 26-ஆம் தேதி பீரோவை திறந்துபாா்த்த போது 6 பவுன் தங்கச் சங்கிலி, 4 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை காணவில்லையாம். புகாரின்பேரில், மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments