முகப்பு
சேலம்

சேலத்தில் கஞ்சா விற்ற பட்டதாரி கைது

சேலத்தில் கஞ்சா விற்ாக தொழில்நுட்ப பட்டதாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 4:22 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

சேலத்தில் கஞ்சா விற்ாக தொழில்நுட்ப பட்டதாரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இரும்பாலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரும்பாலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவரது பெயா் புவனேஸ்வரன் (29) என்பதும், பெருமாம்பட்டி ஏரிக்காட்டைச் சோ்ந்த நாகராஜ் மகன் என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

கைதான புவனேஸ்வரன், பி.டெக். படித்துள்ளாா். கடந்த 6 மாதங்களாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், தருமபுரியில் இருந்து கஞ்சாவை வாங்கிவந்ததாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். விசாரணைக்கு பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments