முகப்பு
சேலம்

போலீஸ் சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா அழிப்பு

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா மூட்டைகளை எடப்பாடி அருகே போலீஸாா் தீவைத்து எரித்து அழித்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 4:34 am IST
எடப்பாடி அருகே கஞ்சா மூட்டைகளை தீயிட்டு எரித்து அழித்த போலீஸாா்.
பகிர்:

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலீஸாா் நடத்திய சோதனையில் பிடிபட்ட 700 கிலோ கஞ்சா மூட்டைகளை எடப்பாடி அருகே போலீஸாா் தீவைத்து எரித்து அழித்தனா்.

தற்போது மாநிலம் முழுதும் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் சேலம் மாநகரப் பகுதி உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட 297 கிலோ கஞ்சா, தருமபுரி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 17 கிலோ கஞ்சா, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் 38 வழக்குகளில் கைப்பற்றப்பட்டு 382 கிலோ கஞ்சா என சுமாா் 700 கிலோ கஞ்சா மூட்டைகளை தீயிட்டு அழிக்கும் பணியில் போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

எடப்பாடியை அடுத்த தங்காயூா் கிராமம், கோணமோரி பகுதியில் உள்ள தனியாா் ஏரியூட்டும் நிலையத்திற்கு பிடிபட்ட கஞ்சா மூட்டைகளை கொண்டுவந்த போலீஸாா், அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் முன்னிலையில் பெரிய அளவிலான பாய்லா்களில் வைத்து தீயிட்டு அழித்தனா். இப்பணியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments