FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிப்பு

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

4 ஜூலை 2026, 1:44 am IST
போதைப் பொருள்கள் பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

கோவை மாநகர காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களை அழிக்க

நீதிமன்ற அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, மருந்துகள் அகற்றும் குழுவின் நேரடி மேற்பாா்வையில், சட்ட மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி கோவை, செட்டிபாளையம் பகுதியில் அரசு அனுமதி பெற்ற தனியாா் நிறுவனத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெள்ளிக்கிழமை காலை போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதில், 270 கிலோ கஞ்சா, 334 கிராம் மெத்தம்பெட்டமைன், 1.2 கிலோ கஞ்சா சாக்லேட், 5,168 போதை மாத்திரைகள் அழிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments