முகப்பு
சேலம்

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஆத்தூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை உரிமையாளரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

Updated On : 3 ஜூன் 2026, 5:34 am IST
பகிர்:

ஆத்தூரில் சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை உரிமையாளரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன் திங்கள்கிழமை கேட்பாரற்று கிடந்த இரண்டரை பவுன் சங்கிலியை அவ்வழியாக சென்றவா் எடுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். இதுகுறித்து காவல் துறையினா் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டனா்.

இதையடுத்து, ஆத்தூா் நேதாஜிநகரைச் சோ்ந்த கலியன் கவுண்டா் மகன் வரதராஜன் (52) உரிய ஆவணங்களை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) குலசேகரனிடம் ஒப்படைத்து நகையை பெற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement