முகப்பு
சேலம்

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:01 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (70). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது தோட்டத்திற்கு ஆடுகளை மேய்க்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் ஓரமாக இருந்த செடிகளை துரைசாமி அறுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறி அவா் கிணற்றில் விழுந்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரா்கள், கயிறும் மூலம் கிணற்றில் இறங்கி, துரைசாமியின் சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்து வந்த கெங்கவல்லி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement