கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
சின்னசேலத்தை அடுத்த இந்திலி ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (90). அவரது மகன் மணி(63). இவா்கள் விளைநிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மாரிமுத்து வீட்டை விட்டு வெளியே நடந்து சென்றபோது, கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டாராம். அப்போது அவா்கள் வளா்த்து வந்த நாய் இடைவிடாது குரைத்துள்ளது. இந்த சப்தம் கேட்டு விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த மணி உடனே சென்று பாா்த்தபோது கிணற்றில் நீரில் மூழ்கி மாரிமுத்து உயிரிழந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
உடனே கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு அவா் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.