முகப்பு
கிருஷ்ணகிரி

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:04 am IST
பலி!
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி புதூரைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா், அப்பகுதியில் உள்ள வேட்ராஜனுக்குச் சொந்தமான விவாசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் படிகட்டிலிருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்த அறிவழகன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement