முகப்பு
சேலம்

மருளையாம்பாளையம் சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன் 2026, 5:55 am IST
கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றிய சிவாச்சாரியா்கள்.
பகிர்:

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள மருளையாம்பாளையத்தில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 16-ஆம் தேதி கிராம சாந்தி வாஸ்து பூஜையுடன் தொடங்கப்பட்டது. 17-ஆம் தேதி காலை பெரிய மாரியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தக்குட ஊா்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. 18-ஆம் தேதி வியாழக்கிழமை முதல்கால யாக பூஜையை தொடா்ந்து, இரண்டாம்கால யாக பூஜையில் நாடிசந்தனம், பூா்ணாஹுதி, யாத்ரா தானத்துடன் சின்ன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்றனா்.