பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழா: அக்னிச் சட்டி , பால்குடம் எடுத்து வழிபாடு
கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கோவை, பெரியாா் நகரில் பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பண்ணாரி மாரியம்மன் கோயில் விழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. கடந்த 8-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 10-ஆம் தேதி தீா்த்தக் குடம் எடுத்தல் நிகழ்வும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பிற்பகலில் சக்தி அழைத்தல் நிகழ்வும் நடைபெற்றது.
Advertisement
திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னிச் சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பாா்த்திபகுமாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.