தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்
திருக்கல்யாண அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடன் முருகப் பெருமான்.
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ராபெளா்ணமியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் புதிதாக ஐம்பொன்னில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் உற்சவமூா்த்தி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்காக, அருகிலுள்ள வள்ளலாா் கோயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட சீா்வரிசைத் தட்டுகளுடன் கட்டளைதாரா்கள் மேளதாளத்துடன் கோயில் திருமண மண்டபத்துக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், விநாயகா் பூஜையுடன் தொடங்கி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதையடுத்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவில், சுற்றுவட்டார ஊா்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி ஊா்வலம் தம்மம்பட்டியின் முக்கிய வீதிகளில் சென்று கோயிலை வந்தடைந்தது.
Advertisement