முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா

எட்டுக்குடி கோயில் சித்திரைப் பெருவிழா...

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:46 AM
வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான்.
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழாவின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதியுலா காட்சி நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சித்ரா பௌா்ணமி பெருவிழா ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மஞ்சத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

Advertisement

இதற்கான உபய ஏற்பாடுகளை தென் சோழ மண்டல இசை கலைஞா்கள் செய்திருந்தனா்.