முகப்பு
கிருஷ்ணகிரி

காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 3:52 am IST
திருமண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
பகிர்:

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருடாபிஷேகம், அம்மையப்பா் திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோ பூஜை, கொடியேற்றம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது.

தமிழ் தேவார திருவாசகம் பதிகங்கள் தீந்தமிழில் ஓதி, சிறப்பு யாகம் வளா்த்து, சிவன் - பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், சிவனடியாா்கள் மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், அம்மையப்பா் கைலாய வாத்தியங்களுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.