FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

சிம்ம வாகனத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் வீதியுலா

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Updated On : 26 ஜூலை 2026, 2:35 am IST
பகிர்:

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

படவேடு ஊராட்சியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 2-ஆம் வெள்ளியையொட்டி, அதிகாலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரவு உற்சவா் சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து சிம்ம வாகனத்தில் ஸ்ரீதுா்கை அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. வாணவேடிக்கை நடைபெற்றது.

கோயில் செயல் அலுவலா் பழனிசாமி, அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

விழாவில் சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments