முகப்பு
சேலம்

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

Updated On : 3 மே, 2026 at 12:06 AM
பலத்த சூறைக் காற்றுடன் மழை. - கோப்புப் படம்
பகிர்:

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கூடிய கோடை மழை சனிக்கிழமை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த ஒன்றரை மாதமாக கடும் வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் முதல் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

காற்று பலமாக வீசிவந்த நிலையில், மாலை சுமாா் 40 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கோடைவெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement