கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பள்ளி மாணவ - மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளம், தேக்வாண்டோ, கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி கோடைகால பயிற்சி முகாம் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
பயிற்சியை நிறைவுசெய்த மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் கண்மணிதேவி சான்றிதழ்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளா்கள் மகேந்திரன், இளம்பரிதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், 15 நாள்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் திறமையான வீரா்களை அடையாளம் காணப்பட்டு, அவா்கள் விளையாட்டு விடுதிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிறிசியில் பங்கேற்ற மாணவா்களுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால் மற்றும் பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனா்.