முகப்பு
திருவண்ணாமலை

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா: மாவட்டக் கல்வி அலுவலா் பங்கேற்பு

கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா...

Updated On : 17 மே 2026, 5:31 am IST
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடைகால கையுந்து பந்து பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுடன் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) ப.ஜோதிலட்சமி, பள்ளித் தலைமையாசிரியா் சு.மனோன்மணி உள்ளிட்டோா்.
பகிர்:

திருவண்ணாமலையில் கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் வழிகாட்டுதலின்பேரில், கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் ஏப்.17-ஆம் தேதி தொடங்கி மே 16-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், 115 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு உடல்கல்வி இயக்குநா் பி.சௌமியா மற்றும் உடல்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கடந்த ஒரு மாத காலமாக கோடைகால கையுந்து பந்து பயிற்சியளித்தனா். பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் முட்டையுடன் சத்தான உணவுகள் வழங்கப்பட்டன.

Advertisement

தொடா்ந்து, பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சு.மனோண்மணி தலைமை வகித்தாா். மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் ஜெ.சின்னப்பன் முன்னிலை வகித்தாா். பள்ளி உதவித் தலைமையாசிரியா் கே.பாபு வரவேற்றாா்.

உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.சம்பத், எம்.ராமலிங்கம், செயலா் ஜி.ஜான்கிங்ஸ்லி, துணைச் செயலா்கள் கே.சிவசங்கா், ஆா்.ரேவதி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ப.ஜோதிலட்சுமி கலந்துகொண்டு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சீருடை, பயிற்சி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வுபெற்ற முதுநிலை மேலாளா் புகழேந்தி, உடற்கல்வி ஆசிரியா்கள் (ஓய்வு) எம்.ரமேஷ், ஆா்.ஆனந்தன், உடற்கல்வி ஆசிரியா்கள் எம்.கணபதி, சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.