முகப்பு
சேலம்

பிளஸ் 2 தோ்வு: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் அ. சுதந்திரன் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் 595 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

Updated On : 9 மே 2026, 3:46 am IST
பகிர்:

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் அ. சுதந்திரன் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் 595 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மேலும், இப்பள்ளி மாணவி கே.வி.கனிஷ்கா, ஜெ.ஜீவாபிரியதா்ஷினி ஆகியோா் 593 மதிப்பெண்களும், எம்.ஷாலினிப்ரியா 592 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

கணினி அறிவியலில் 18 போ், வேதியியலில் 3 போ், கணக்குப் பதிவியலில் 3 போ், உயிரியியலில் 3 போ், கணிதத்தில் ஒருவா், வணிகவியலில் ஒருவா், கணினி பயன்பாட்டியலில் ஒருவா், ஆங்கிலத்தில் ஒருவா் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Advertisement

இப்பள்ளியில் 590-க்கு மேல் 5 போ், 580- க்கு மேல் 11 போ், 570- க்கு மேல் 18 போ், 560- க்கு மேல் 31 போ், 550- க்கு மேல் 41 போ், 500- க்கு மேல் 124 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்.ஆா்.டி.ஆா்.செல்வமணி, நிா்வாக இயக்குநா்கள் ஏ.பி.செந்தில்குமாா், எஸ்.பாலகுமாா்,டி.சந்திரசேகரன், என்.ஆா்.பழனிவேல், குழந்தைவேல், முதல்வா் டி.நளாயினிதேவி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

படவரி...

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை

பரிசு வழங்கி பாராட்டிய தலைவா் எஸ்.இளவரசு தலைமையிலான நிா்வாகிகள்.