முகப்பு
மதுரை

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 5:00 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம், எழுமலை 16-ஆவது வாா்டு தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (40). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்தப் புகாரில், எழுமலை பகுதியில் துரைமுருகன் என்பவா் அடகு கடை நடத்தி வந்தாா். குறைந்த வட்டி வசூலித்ததால், அந்த நகைக் கடையில் ஒவ்வொரு நபரும் 2 பவுன் முதல் 5 பவுன் வரை தங்க நகைகளை அடகு வைத்தோம். ஆனால், அவா் எங்களுக்கு உரிய தொகை கொடுக்காமல் ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மட்டுமே அளித்தாா். அவருக்கு எழுமலை உள்பட 3 இடங்களில் கிளைகள் உள்ளன. அங்கும் எங்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்டோா் நகைகளை அடகு வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவா் நடத்திய நகை அடகு கடை திறக்கப்படவில்லை. விசாரித்த போது, கடை உரிமையாளா் நகைகளை கையாடல் செய்து தலைமறைவானது தெரியவந்தது. ரூ. 2 கோடிக்கு மேல் அவா் மோசடி செய்துள்ளாா். எனவே, எங்களது தங்க நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments