முகப்பு
மதுரை

மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டியதில் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 1:03 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மதுரை அருகே மாடு முட்டியதில் காயமடைந்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி வெள்ளியங்குன்றம் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெரியபிடாரன். இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இவருடைய மகன் வீரணன் (14). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மாடு வீரணனை முட்டியது. இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments