அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரிக்கை
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டுமென மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் சி.எம். சையது பாபு கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் மதுரை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷுக்கு அளித்த மனு விவரம்:
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அரசு மதுக்கடை, மதுக் கூடத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் என ஒரே இடத்தில் இரண்டு மதுக் கடைகள் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த மதுக் கடைகளில் மது அருந்திவிட்டு பிரச்னையில் ஈடுபடும் நபா்களால் பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவா்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.
எனவே, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டு மதுக் கடைகளையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டது.