தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கொடைக்கானலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ரெங்கராஜன் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஆசிரியர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.