சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வென்ற பிஎஸ்ஜி அணி குறித்து...
பிரீம்யர் லீக்கின் சாம்பியன் ஆர்செனல் அணியை பிஎஸ்ஜி அணி பெனால்டி ஷுட் அவுட்டில் 4-3 என வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி அணி வென்றது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிஷத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார்.
முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது.
Advertisement
Advertisement
பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. ஆர்செனல் சார்பில் எபிரேஸி, கேப்ரியல் மகல்ஹேஸ் கோல் அடிக்க தவறினார்கள். பிஎஸ்ஜி சார்பில் நுனோ மெண்டிஸ் கோல் அடிக்க தவறினார்.
இந்தப் போட்டியில் 72 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 4 முறை கோல் அடிக்க முயன்றது. டிஃபென்ஸில் பலம்வாய்ந்த ஆர்செனல் அணி சிறப்பாகவே தடுத்து வந்தது.
சாம்பியன்ஸ் லீக்கின் மன்னன் ரியல் மாட்ரிட் அணிக்குப் பிறகு பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளார்.
முன்னதாக 2016-18 சீசனில் தொடர்ச்சியாக மூன்று முறை ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றிருந்தது.