வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் கைது
வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வத்தலகுண்டுவில் வக்ஃபு வாரிய ஆய்வாளரை மிரட்டிய 2 வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம்,
வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான, பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளில் வக்ஃபு வாரிய அதிகாரி அப்துல் ரசாக் வாடகை வசூலிக்கச் சென்றாா். அப்போது காய்கறி கடை நடத்தி வந்த இஸ்மாயில் (45), இரும்புக் கடை நடத்தி வந்த தாரிக் (25), ஆகியோா் அப்துல் ரசாக்கிற்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அப்துல் ரசாக் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். இதைத்தொடா்ந்து சாா்பு-ஆய்வாளா் சேக் அப்துல்லா தலைமையிலான தனிப்படையினா், ஓசூரில் பதுங்கியிருந்த இஸ்மாயில் மற்றும் தாரிக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.