மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி முகாம்
வத்தலகுண்டில் மின்வாரிய ஊழியா்களுக்கு, பாதுகாப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வத்தலகுண்டில் மின்வாரிய ஊழியா்களுக்கு, பாதுகாப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு திண்டுக்கல் மேற்பாா்வை பொறியாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். இதில் நிலக்கோட்டை, ஆத்தூா், கொடைக்கானல் ஆகிய மூன்று வட்டங்களைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு குறித்தும், மின்வாரிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் செயற்பொறியாளா் கருப்பையா, உதவி செயற்பொறியாளா்கள் மாணிக்கம், மேத்யூ, ராஜேந்திரன், வத்தலக்குண்டு உதவிப் பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.