முகப்பு
திண்டுக்கல்

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:15 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:12 PM

பழனி மலைக் கோயில் ரோப் காா் பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை (ஏப். 16) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை, வின்ச், ரோப் காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் காா் பக்தா்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோப் காா் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த ரோப்காா் நாள்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை மட்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.