பராமரிப்புப் பணி: பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தம்!
பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தப்படவுள்ளது குறித்து...
பராமரிப்புப் பணிக்காக, பழநி மலைக் கோயில் ரோப் கார் சேவையானது மே 22 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்ல படிப் பாதை, யானைப் பாதை, வின்ச், ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயிலின் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் சேவை, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
ரோப் கார் சேவை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த ரோப்கார் நாள்தோறும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மே 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It has been announced that the rope car service at the Palani Hill Temple will be suspended for one day on May 22nd for maintenance work.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.