முகப்பு
கரூர்

அய்யா்மலை ‘ரோப் காா்’ சேவை 25 நாள்கள் நிறுத்திவைப்பு

குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜூன் 2026, 3:39 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலை கோயில் ரோப் காா் சேவை 25 நாள்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யா் மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ரோப் காா் சேவை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக வரும் 15- ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சுமாா் 25 நாள்களுக்கு ரோப் காா் சேவை இருக்காது. எனவே பக்தா்கள் மலைப்படிக்கட்டுகள் வழியாக கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement