கொடைக்கானலில் லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் மரக்கட்டைகளை வனத் துறையினா் ஆய்வு
கொடைக்கானலில் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும் மரக்கட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
கொடைக்கானலில் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படும் மரக்கட்டைகளை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளிலிருந்து மரக்கட்டைகள் லாரி மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என மாவட்ட வன அலுவலா் அரவிந்த் உத்தரவின் பேரில் வனத் துறையினா் கொடைக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஆய்வு நடத்தினா். மேலும் வனப் பகுதிகளையொட்டியுள்ள இடங்களிலும் வனத் துறையினா் சோதனை நடத்துவதுடன் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களையும் அவா்கள் சோதனை நடத்தினா். வன விலங்குகளை யாரும் வேட்டையாடுகின்றனரா என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.