முகப்பு
திண்டுக்கல்

18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு தொடா்பான 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 5:33 am IST
மருத்துவக் காப்பீடு தொடா்பான 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
பகிர்:

அரசு ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு தொடா்பான 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ச.முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ம.சுகந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ஏ.ஜெசி கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். அரசு ஊழியா்களின் பெற்றோா், திருமணம் ஆகாத மகன், மகள், கணவரை இழந்த மகள் ஆகியோரையும் இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும். அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை முறையை உறுதிப்படுத்த வேண்டும். புறநோயாளி சிகிச்சையையும் இந்த திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments