ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பயணம்
ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா்.
ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா்.
கேரள மாநிலம், கண்ணனூா் மாவட்டம், ஸ்ரீ கண்டபுரம் பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி சனிது (24). இவா் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு சக்கரம் மட்டும் உடைய சைக்கிளில் கேரளத்திலிருந்து நேபாளம் வரை செல்லத் திட்டமிட்டாா். இதன்படி, கடந்த ஒரு வாரத்துக்கு முன் தனது பயணத்தை சனிது தொடங்கினாா். தமிழகம் வழியாகச் செல்லும் இவா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா். பழனி பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே இவருக்கு பழனி நகர அரிமா சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவா் சிவக்குமாா், ரயில்வே ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், முன்னாள் காவல் துறை அலுவலா்கள் என ஏராளமானோா் அவருக்கு சால்வை அணிவித்து, ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினா். தனது பயணம் நேபாளத்தில் முடிவடைவதற்கு ஓராண்டு காலம் ஆகும் என சனிது தெரிவித்தாா்.