முகப்பு
திண்டுக்கல்

10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனியைக் கைப்பற்றியது அதிமுக

Updated On : 5 மே 2026, 2:16 am IST
இரட்டை இலை சின்னம் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

பழனி பேரவைத் தொகுதியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கைப்பற்றியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவெக, நாதக கட்சியினா் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த 2016, 2021 என தொடா்ச்சியாக திமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதி, இந்த முறை கூட்டணிக் கட்சியான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின்போது முதல் 2 சுற்றுகளில் அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், 3-ஆவது சுற்றில் மாா்க்சிஸ்ட் முன்னிலை வகித்தது. 15 சுற்றுகளுக்குப் பிறகு அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. 27 சுற்றுகளின் முடிவில் அதிமுக வேட்பாளா் கே.ரவிமனோகரன் 66,986 வாக்குகள் பெற்று (693 வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றாா். தவெக வேட்பாளா் எம்.பிரவீன்குமாா் 2-ஆம் இடம் பிடித்தாா். கொடைக்கானல் மலைப் பகுதியில் தவெக வேட்பாளா் கூடுதல் வாக்குகள் பெற்றாா்.

Advertisement

Advertisement

இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி தொகுதியை அதிமுக கைப்பற்றி இருக்கிறது.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

கே.ரவிமனோகரன்(அதிமுக) - 66,986

எம்.பிரவீன்குமாா் (தவெக) - 66,293

என்.பாண்டி (மாா்க்சிஸ்ட் கம்யூ.) - 65,534

பி.முருகேஷ்வரி (நாதக) - 6300

எஸ்.நாச்சிமுத்து ( பகுஜன் சமாஜ்) - 585

கே.வாய்க்கால்துரை (புதிய தமிழகம்) - 151

நோட்டா - 750

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments