முகப்பு
திண்டுக்கல்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 6 மே 2026, 3:09 am IST
கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்த பாலம்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த அட்டுவம்பட்டியில் சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வில்பட்டி ஊராட்சி, அட்டுவம்பட்டியில் தெற்குமேடு கருப்பசுவாமி கோயில் பிரிவு அருகேயுள்ள பாலம் சேதமடைந்துள்ளது. கொடைக்கானலிருந்து-பள்ளங்கி, கோம்பை, அட்டுவம்பட்டி, அரக்கால், கடல்கொடை உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு இந்தப் பாலம் வழியாகதான் செல்ல முடியும்.

இந்தப் பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகம், ஊராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும், இந்தப் பாலம் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எனவே, சேதமடைந்துள்ள இந்தப் பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.