மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
ரயில்வேத் துறையில் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வேத் துறையில் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைத்த மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, இளைஞா்களின் எதிா்காலத்தைப் பாதிக்கும் வகையில்
Advertisement
ரயில்வேத் துறையில் 29 ஆயிரம் பணியிடங்களை குறைப்பதற்கான முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுமக்களையும், வணிகா்களையும் கடுமையாக பாதிக்கும் வகையில் எரிவாயு உருளை விலை ஏற்றத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்ல் -விடுதலை) மாவட்டச் செயலா் முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி உலக நம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.