மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அமலாக்கத் துறை மற்றும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலாளா் காமராஜ் தலைமை வகித்தாா். இதில், கேரளத்தின் முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் புது தில்லியில் சிபிஎம் அகில இந்திய பொதுச் செயலாளா் பேபி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று கைதான நபா்களை விடுதலை செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். இதில், கேசவன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன், காசி, ஜோதி, செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement