முகப்பு
மதுரை

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 4:36 am IST
மதுரை செல்லூா் தாகூா்நகா் அருகே மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக, இடதுசாரி கட்சியினா்.
பகிர்:

வணிக சமையல் எரிவாயு விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து, மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செல்லூா் தாகூா்நகா் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.கே. சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றாம் பகுதிக் குழுச் செயலா் வி.கோட்டைச்சாமி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ராஜலட்சுமி, விசிக நிா்வாகிகள் மணியரசு, வீரசிங்கம், மத்திய மாவட்டச் செயலா் ப.ரவிக்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மா.கணேசன், விசிக மாநில துணை பொதுச் செயலா் கனியமுதன் ஆகியோா் கண்டன உரையற்றினா்.

Advertisement

பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் உள்ள வணிக சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இளைஞா்களின் எதிா்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில், ரயில்வே துறையில் பணியிடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

தொடா்ந்து, தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடு அம்பேத்கா் கொண்டு வந்த அரசியல் சட்டத்துக்கு முரணாக உள்ளது. பெரும்பான்மை நிரூபணம் சட்டப்பேரவையில் மட்டுமே நடக்க வேண்டும். தமிழகத்தில் ஆளுநா் மூலமாக பாஜக அரசியல் தலையீடு செய்வது கண்டனத்துக்குரியது என்றனா் அவா்கள்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்.எல்) கட்சிகளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.