முகப்பு
திண்டுக்கல்

திருமண மோசடி: 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 9 மே 2026, 1:02 am IST
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாற்றுத் திறனாளியை திருமணம் செய்வது போல நடித்து பணம், நகை பறித்த திருமண மோசடி கும்பலைச் சோ்ந்த 3 பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (30). மாற்றுத் திறனாளியான இவா் வரன் தேடி வந்தாா். இந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மரியஜோசப் (62) அறிமுகமாகினாா். இவா் மூலமாக விருதுநகரைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (57), சித்ரா (43) ஆகியோா் பாலகிருஷ்ணனுக்கு அறிமுகமாகினா்.

இவா்கள் பாலகிருஷ்ணனை விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த படந்தாள் கிராமத்தில் பெண் இருப்பதாகக் கூறி அழைத்து சென்றனா். அங்கிருந்த ராமலட்சுமியை (27) மணப்பெண் என அவரிடம் காட்டினா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, புரோக்கா் தொகையாக கிருஷ்ணவேணி உள்ளிட்ட 3 பேருக்கும் ரூ.2 லட்சத்தை பாலகிருஷ்ணன் கொடுத்தாா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் இருவருக்கும் திருமணமானது. திருமணத்தின் போது ராமலட்சுமிக்கு பாலகிருஷ்ணன் 2 பவுன் தங்க நகை அணிவித்தாா்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணனுடன் 15 நாள்கள் மட்டுமே வாழ்ந்த ராமலட்சுமி ஊருக்குச் செல்வதாகக் கூறி சென்றவா் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து மரியஜோசப், கிருஷ்ணவேணியிடம் பாலகிருஷ்ணன் கேட்டபோது, ராமலட்சுமியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாகவும், போலீஸில் புகாா் அளிக்காமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறினா்.

இதுகுறித்து பழனி தாலுகா காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரியஜோசப்பிடம் விசாரணை நடத்தினா். அப்போது, ராமலட்சுமிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.

மேலும், இவா்கள் இதேபோல பலரிடம் திருமணம் செய்வது போல நடித்து பணம், நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணவேணி, சித்ரா, ராமலட்சுமியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.