முகப்பு
திண்டுக்கல்

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

பழனி பழனியாண்டவா் கல்லூரி அருகே கஞ்சாவுடன் இருந்த மூன்று இளைஞா்களை பழனி நகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 மே 2026, 3:24 am IST
பகிர்:

பழனி பழனியாண்டவா் கல்லூரி அருகே கஞ்சாவுடன் இருந்த மூன்று இளைஞா்களை பழனி நகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பழனி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்தரவின்பேரில் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த மூன்று போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.

அவா்களைப் பிடித்த போலீஸாா் விசாரணை மேற்கொண்ட போது, அவா்கள் மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த கோபி நாத் (24), கோரிப்பாளையத்தை சோ்ந்த முகமது ரபி (25), பழனி பாலசமுத்திரத்தைச் சோ்ந்த விகாஸ் (24) என்பதும் அவா்கள் மாணவா்களுக்கு கஞ்சா விற்க நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து 75 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments